கட்டாய ஓய்வு

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளான கணவனும் மனைவியும் டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலில் தங்கள் நாய்க்குட்டியை நடைபயில அழைத்துச் சென்றபோது இளையர்கள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு அவர்களது செல்லப் பிராணி பயப்படக்கூடாது என்பதற்காக அவர்களை அந்தத் திடலில் இருந்து வெளியேற்றினர். பின்னர் தங்கள் செல்லப் பிராணியுடன் அந்தத் திடலில் நடைபயின்றனர்.